தீக்கிரைக்குள்ளான ‘பெஷன் பக்’ ஆடைக்களஞ்சியத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் றிசாத் !

பெஷன் பக் ஆடைக்களஞ்சியம் நேற்று இரவு தீப்பற்றி எரிந்தமை குறிப்பிடத்தக்கது , இந்த சம்பவத்தையைடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீன் சம்பவ இடத்திற்கு இன்று காலை நேரடியாக விஜயம் செய்து தீக்கிரைக்குள்ளான கட்டிடத்தை பார்வை இட்டதுடன் தனது வருத்தத்தையும் தெரிவித்திருந்தார் .

15056253_914460748684820_37491279888321277_n

15094330_914460768684818_6998221852271751972_n

குறித்த தீ விபத்தில் ஆடைக் களஞ்சியத்தின் முதன்மை அலுவலகம் மற்றும் பிரமாண்ட காட்சியறை என்பனவே தீக்கிரையாகியுள்ளதாக அதன் முகாமையாளர் தெரிவித்துள்ளார் .

15178123_914460795351482_6695347436508869880_n

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் தீவிபத்தின் காரணமாக 40 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் தீயில் எரியுண்டு நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.