தவராசாவினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்த அறிக்கைகள் பி.ஏ.ஏல் சுபியான் மௌலவிடம் கையளிப்பு!

பாறுக் ஷிஹான்
வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் குறிப்பாக யாழ்  கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் வடக்கு மாகாண சபை எதிர்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா இ யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் யாழ்  கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் மக்கள் பணிமனை தலைவருமான அஷ்ஷெய்க் பி.ஏ.ஏல் சுபியான் மௌலவி மற்றும் அதன் உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
15032243_1790939927820282_8551816058194561546_n
இன்று (18) காலை நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் முஸ்லீம்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் சி.தவராசாவினால் சமர்ப்பிக்கப்பட்ட  அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொது மக்கள் கருத்தறி குழுவிடம் வழங்கப்பட்ட அறிக்கைகள்  இதன்போது   அஷ்ஷெய்க் பி.ஏ.ஏல் சுபியான் மௌலவியிடம்  வழங்கப்பட்டது.
15095645_1790939974486944_270591536539896851_n