ஐரோப்பாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் : பிரதமர்

ranil_wikramasinghe-2_Fotor

ஐரோப்பாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.யுத்தத்தின் பின்னர் இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஐரோப்பாவில் குடிபெயர்ந்துள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பாதைகளை அமைப்பது மட்டும் நாட்டின் அபிவிருத்தியாக கருதப்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.