மூன்று இலட்சம் அகதிகளை அனுமதிக்க கனடா முடிவு!

welcome-to-canada

கனடா அரசாங்கம் அகதிகள் தொடர்பில் புதியதொரு முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் மூன்று இலட்சம் அகதிகளை அனுமதிக்க கனடா முடிவு செய்துள்ளதாக கனடாவின் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் ஜான் மெக்கலம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அந்த அரசாங்கம் 2017ஆம் ஆண்டுக்கான அகதிகளை ஏற்க தயார் என்றும் கடந்த ஆண்டும் இதே அளவு அகதிகளை தான் அனுமதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மக்கள் தொகை, பொருளாதார நிலையை கருத்தில் கொண்டே இந்த வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் உள் நாட்டுப் போர் நிலவி வருவதால் அந்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் அகதிகளாக பிற நாடுகளுக்கு குடியேறி வருகின்றனர்.

அண்மையில் பிரான்சின் காலேஸ் பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அகதிகள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.