ஜெனீவாவில் மைத்திரியின் சாதனை !

 
images
 முன்னைய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை புகைப்படங்களை வெளியிடுவது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அடங்கிய ஆவணமொன்றை, 68ஆவது உலக சுகாதார மாநாட்டின்போது வெளியிட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மாநாடு, இன்று திங்கட்கிழமை (18) ஜெனீவாவில் ஆரம்பமாகியது. இதில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டுள்ளனர். சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை புகைப்படங்களை வெளியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்கொண்ட சவால்கள் மற்றும் அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றன மேற்படி ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது