புத்தர் சிலை வைக்­கப்­பட்ட பகு­தியில் தியான மண்­டபம் அமைக்க காணி வேண்­டு­மென தேரர்கள் கோரிக்கை !

putharsillai1-1இறக்­காமம் – மாணிக்­க­மடு தமிழ்க்­கி­ரா­மத்தில் பௌத்த பிக்­கு­களால் வைக்­கப்­பட்ட புத்தர் சிலையை அகற்­று­மாறு இப்­பி­ர­தேச தமிழ் – முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் குறித்த பகு­தியில் தியான மண்­டபம் அமைக்க காணி வேண்­டு­மென பௌத்த தேரர்கள் பிர­தேச செய­லா­ள­ரிடம் கேட்­டுள்­ளனர்.

இதனால், இறக்­காமம் பிர­தேச மக்கள் இன்னும் பதற்­றத்­து­டனும் அச்­சத்­து­டனும் காணப்­ப­டு­கின்­றனர். இறக்­காமம் பிர­தேச செய­லாளர் எம்.எம்.நஸீர் உள்­ளிட்ட பௌத்த பிக்­குகள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை (04) மாணிக்­க­மடு கிரா­மத்­திற்குச் சென்று குறித்த சிலை வைக்­கப்­பட்ட இடத்தைப் பார்­வை­யிட்­டனர். 

இவ்­வி­டத்தில் பௌத்த பிக்கு ஒருவர் தங்­கு­வ­தற்­கான அறை­யொன்­றையும் மக்கள் தங்கிச் செல்­வ­தற்­கான தியான மண்­ட­ப­மொன்­றையும் அமைக்க பிர­தேச செய­லா­ள­ரிடம் காணி வேண்­டு­மென பௌத்த தேரர்கள் கேட்­டுள்­ளனர். இதனால் இப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் மத்­தியில் மேலும் பதற்­ற­மான சூழ்­நிலை காணப்­ப­டு­கின்­றது. 

கடந்த வெள்­ளிக்­கி­ழமை காலை அம்­பாறை மாவட்ட செய­ல­கத்தில் நடை­பெ­ற­வி­ருந்த கூட்­டத்தை சிறு­பான்­மை­யினர் பகிஷ்­க­ரித்­த­தையும் பொருட்­ப­டுத்­தாது இதே தினம் தியான மண்­ட­பத்­துக்­கான காணியைக் கேட்­டுள்­ளமை சிறு­பான்­மை­யி­னரை ஆத்­தி­ர­ம­டையச் செய்­துள்­ளது. 

தொல்­பொருள் ஆராய்ச்சித் திணைக்­களம் அடை­யா­ளப்­ப­டுத்­திய பகு­திக்கு அப்பால் உள்ள காணியில் குறித்த மண்­ட­பத்தை அமைக்க பிர­தேச செய­லா­ள­ரிடம் பிக்­குகள் அனு­மதி கேட்­ட­போது தங்கள் கோரிக்­கையை எழுத்து மூலம் தரு­மாறும் சட்­ட­திட்­டங்­க­ளுக்கு அமை­வா­கவே தீர்­மானம் எடுக்க வேண்­டி­யுள்­ள­தா­கவும் பிர­தேச செய­லாளர் கூறி­யுள்ளார். 

இறக்­காமம் பிர­தே­சத்தில் பௌத்த பிக்­கு­களின் நட­வ­டிக்கை மேலும் அதி­க­ரித்த வண்­ண­மே­யுள்­ளது. சிறு­பான்மை சமூ­கங்கள் நல்­லாட்­சியில் வைத்­துள்ள அதீத நம்­பிக்­கையை சில பௌத்த பிக்குகளின் சமயத்தின் பெயரிலான தீவிரப் போக்குகள் இல்லாமல் செய்யும் சூழ் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகளும் இப்பிரதேச பிரமுகர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.