காலத்திற்கேற்ற நவீன அரசியல் யாப்பொன்று உருவாக்கப்படுவது அவசியமாகும் : கலாநிதி ஜயம்பதி

அஷ்ரப் ஏ சமத்

அரசியலமைப்புச் சீர்திருத்தம் முறை மற்றும் முஸ்லீம்களது உரிமைகள் பற்றி முஸ்லீம் கவுன்சில் இன்று(30) கருத்தரங்கொன்றை பொரளை செற்றக் நிறுவனத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வு கவுன்சிலின் தலைவா் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் புதிய அரசியல் அமைப்பு சம்பந்தமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பிணா் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்டன. கலந்து கொண்டு உரையாற்றினாா், அத்துடன் முஸ்லீம் ஆய்வகத்தின் தலைவா் எம்.ஜ.எம். முஹைதீன், மற்றும் சட்டத்தரணி வை.எல்.எஸ் ஹமீட், ஆகியோறும் கலந்து கொண்டு உரையாற்றினாா்கள்.
இங்கு உரையாற்றிய கலாநிதி ஜயம்பதி,
SAMSUNG CSC

சிறுபான்மைச் சமூகங்களது நலன்களையும் உள்வாங்கி நவீனஅரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதிஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்தார்.

தென் ஆபிரிக்கா, கென்யா, நேபாளம், கிழக்கு டிமோர் ஆகியநாடுகளில் பன்மைத்தன்மை பேணுதல், சமூகநீதி, சமத்துவம்போன்ற அம்சங்களை உள்ளடக்கி இந்த அரசியலமைப்புத்திட்டம் தயாரிக்கப்படும்.

முஸ்லிம் இயக்கங்களின் கட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில்ஒப் ஸ்ரீலங்கா ஏற்பாடு செய்திருந்த அரசியலமைப்புச் சீர்திருத்தசெயற்பாடுகள் பற்றிய கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயேஅவர் இதனைத் தெரிவித்தார்.

முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தலைமையில்நடைபெற்ற இக்கருத்தரங்கில் அவர் மேலும் கூறியதாவது,

அரசியல் யாப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆறு குழுக்களும்அவற்றின் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன. அடுத்த இருவாரத்திற்குள் இவை மொழி  பெயர்க்கப்பட்டு வெளியிடப்படும்.

வழி காட்டல்குழு பிரதமர் தலைமையில் செயற்பட்டுவருகின்றது. சகல கட்சிகளதும் பிரதிநிதிகள் இதில் இடம்பெற்றுள்ளார்கள்.

SAMSUNG CSC

தேர்தல் முறை பற்றி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுவரப்படுகின்றன.

அரசியல் யாப்பு தொடர்பாக ஒரு வசனம் கூட இதுவரைக்கும்வகுக்கப்படவில்லை. சில சமூக ஊடகங்களால் வெளிநாட்டுஉதவியுடன் அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டு விட்டதாகச்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. எங்களுக்கு அரசியல்யாப்பினைத் தயாரிப்பதற்கு எந்த வெளிநாட்டு உதவியும்தேவையில்லை. உபகுழுக்களது அறிக்கையே நகலாகவெளியிடப்படும். அதன் பின் வழிகாட்டல்குழு யாப்பினைத்தயாரிக்கும். இதன் பின் பாராளுமன்றத்திலும் வெளியிலும் இதுதொடர்பாக விவாதிக்க இடமளிக்கப்படும்.

உலகில் மிகச் சிறந்த அரசியல் யாப்பினைத் தயாரிக்கமுடியாவிட்டாலும் உரிய சூழலுக்கு ஏற்ப

சிறந்த அரசியல் திட்டம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.

தமிழர் கூட்டமைப்பில் ஆர். சம்பந்தன் போன்ற ஒருவர்தலைவராக இருக்கும் போது இதனை நிறைவேற்ற  முடியாமல்போனால் இனி ஒரு அரசியல் யாப்பினை எங்களால் தயாரிக்கமுடியமா  என்பது சந்தேகத்துக்குரியதே

மேற் கொள்ளப்படும் தேர்தல் முறையில் மாற்றங்கள் பற்றிஇப்போது கலந்துரையாடப்படுகின்றது. தொகுதி மற்றும்விகிதாசார முறையிலான தேர்தல் முறையைஅறிமுகப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்படுகின்றது. இந்தமுறையின் கீழ் கட்சிக்கும் அபேட்சகருக்கும் வாக்களிப்பதற்குஒருவருக்கு இரு வாக்குகள் வழங்கப்படும். 

சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளது நலன்களைஉள்வாங்குவதற்காக பல அங்கத்தவர் தொகுதிமுறைஇழப்பீட்டு பிரதிநிதித்துவம் என்பனவும்அறிமுகப்படுத்தப்படவுள்ளன. ஜேர்மன் மற்றும் நியூசிலாந்தில்பின்பற்றும் தேர்தல் முறையை ஒத்ததாகவே இத்தேர்தல் முறைஅமையும்.

பெரிய கட்சிகள் ஸ்திரமான அரசினை அமைப்பதற்கு போனஸ்முறை இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துவருகிறார்கள்.

வெட்டுப்புள்ளி இருக்கக் கூடாது என்பது எனதுஅபிப்பிராயமாகும்.

தேர்தல் தொகுதி அகில இலங்கை ரீதியாக அமையவேண்டுமா? மாகாண ரீதியாக அமைய வேண்டுமா? என்பதுபற்றி கருத்து முரண்பாடுகள் உள்ளன. தமிழர் கூட்டமைப்புமாகாண மட்டத்தையே விரும்புகிறது. கூடுதலானவர்கள்தேசிய விகிதாசாரத்தை விரும்புகிறார்கள்.

உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக மக்கள்விடுதலை முன்னணி சாதகமான முறையில் கருத்துக்களைவெளியிட்டு வருகின்றது. 

அதிகாரப் பரவலாக மாகாண மட்டத்தில் அமைய வேண்டும்என்ற கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.

மாகாணங்கள் இணைய வேண்டுமா? என்பது பற்றி குறிப்பிட்டமாகாணங்களே தீர்மானம் எடுப்பதற்கு யாப்பில் வசதிசெய்யப்படுதல் வேண்டும். அந்த இரு மாகாண மக்கள்இணங்கினால் மாகாணங்கள் இணைந்து செயற்படலாம்.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டுமென தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நான் கருத்துக்கள் எதனையும் கூறவிரும்பவில்லை. தேசவழமை மற்றும் கண்டிய சட்டங்களிலும்மாற்றங்கள் கொண்டு வருவதற்கு இணக்கம்தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலத்திற்கேற்ற நவீன யாப்பு ஒன்று உருவாக்கப்படுவதுஅவசியமாகும்.

தற்போதைய அரசியல் யாப்பில் சில ஷரத்துக்களைமாற்றுவதற்கு பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்புநடத்தப்படல் வேண்டும். ஒரு கமாவை மாற்றுவதாகஇருந்தாலும் பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.மக்களது அங்கீகாரம் பெற்றே யாப்பு திருத்தப்படும்.

அரசியலமைப்பு விவகார ஆலோசகர் வை.எல்.எஸ். ஹமீத், முஸ்லிம் கவுன்சில் உப தலைவர் ஹில்மி அஹமட் ஆகியோரும்உரையாற்றினர். எம்.ஐ.எம். முகைதீன், அசாத் சாலி உட்படபலர் இதில் பங்குபற்றினர்.