கட்டார் நாட்டின் முன்னாள் மன்னரின் மறைவுக்கு அமைச்சர் றிசாத் அனுதாபம் !

14813374_665357210296994_1484911497_oகட்டார் நாட்டின் முன்னாள் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக, இன்று (25/10/2016) கொழும்பில் உள்ள கட்டார் தூதரகத்துக்குச் சென்ற மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன், அனுதாபக் குறிப்புப் புத்தகத்தில் கையெழுத்திட்டார். கட்சியின் சார்பாகத் தனது வருத்தத்தையும் வெளியிட்டார்.  

14804975_665356680297047_1721304808_n

unnamed-2

அமைச்சர் றிசாத் கட்டார் – இலங்கை இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர அக்கறை தொடர்பில் 2௦12 ஆம் ஆண்டு கட்டார் தலைநகர் டோகாவிற்கு முன்னாள் ஜனாதிபதியின் பிரதிநிதியாக, அவரது விஷேட செய்தி ஒன்றை எடுத்துச் சென்று, அண்மையில் காலஞ்சென்ற கட்டார் அமீரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.