ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான சட்டமூலத்தை மீண்டும் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை !

pensionsஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான சட்டமூலத்தை மீண்டும் திருத்தியமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் ஆரம்ப கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, ஓய்வூதியத் திணைக்களம், நிதி அமைச்சு, கொடுப்பனவுகள் மற்றும் மதீப்பீட்டு திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் தயார் செய்யப்பட்ட ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான சட்டமூலத்திற்கு பல ஆட்சேபனைகள் தெரிவித்தமை காரணமாக அதனை மீள திருத்தியமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.