யாழில் கஞ்சாவுடன் இந்திய பிரஜை உட்பட மூவர் கைது

பாறுக் ஷிஹான்
 யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் கஞ்சாவுடன் இந்திய பிரஜை உட்பட  மூன்று பேர் இன்று(15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப் படையினர் (STF) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே, சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில் நடமாடிய இம்மூவரும் 36 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
fb_img_1476514994089_fotor
கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் காரைநகரைச் சேர்ந்தவர்களெனவும் மற்றைய நபர் இந்தியாவைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.குறித்த மூவரையும், மீட்கப்பட்ட கஞ்சாவையும் விசேட அதிரடிப்படையினர் ஊர்க்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளதோடு,மேலதிகவிசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸாரே மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்ப டுகிறது.
விசாரணையின் பின் சந்தேகநபர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
fb_img_1476514957476_fotor