தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னை வந்துள்ள ராகுல் காந்தி!

rahul-gandhi-lதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னை வந்துள்ளார்.

புதுடெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்துள்ள ராகுல் காந்தி, அங்கிருந்து நேராக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய உள்ளார். ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை விசாரித்த பின் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் உடல் நிலை பற்றி விசாரிப்பதற்காகவே டெல்லியில் இருந்து வந்தேன். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் விரைவில் பூரண நலம் பெறுவார்.

அவரது உடல் நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். எனது வாழ்த்துகளையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கவே சென்னை வந்து பார்த்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.