கொல்ல தெருவில் ஊசிவிக்கப்போகும் ஹரீஸ் வாங்கிக்கட்டப்போகிறார் !

collage_fotor_fotorஏ.ஜமால்டீன் 

வரலாறு காணாத சேவைகளை செய்து காட்டிவிட்டு மரணித்த மர்ஹூம் அஸ்ரப் உருவாக்கிய கட்சியில் அவரது கொள்கைகளை பின்பற்றக் கூடியவர்களாக யாரையும் காணமுடியாதுள்ளது என இறக்காம மக்கள் தெரிவிக்கின்றனர் 

ஹரீஸ் எம் பி னால் இறக்காம பொதுவிளையாட்டு மைதானத்துக்கு 20 இலட்டசம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மைதானத்தில் பாத்திருப்பு மண்டபம் கட்டப்பட்டது 

இம்மண்டபம் உரியமுறையில் கட்டப்படாமையினால் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து 21 நாட்களுக்குள் கூரை மற்றும் இதர கட்டுமானங்கள் காற்றில் பறந்துவிட்டது 

இக்காலத்தில் 20 இலட்சம் ரூபாய் தரமான கழிவறை ஒன்றை நியமிப்பதற்கே போதுமானதாக உள்ள வேளையில் கண்துடைப்புக்காக நிதி ஒதுக்கப்பட்டு இந்நிதியை தனது பினாமியான இறக்காம பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஜபீர் அவர்களுக்கு வழங்கி முடியுமானவரை எடுக்கக் கூடியவற்றை எடுத்துவிட்டே இம்மண்டபம் கட்டப்பட்டுள்ளது, 

விளையாட்டுத் துறை பிரதி அமைச்சரின் வக்கில்லாத தனத்தையும் நவீன காலத்தில் மரங்களை கொண்டு பாதிருப்பு மண்டபம் அமைக்கக்கூடிய அவரது திறமையையும் இறக்காம மக்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனர் 

ha2_fotor

அதேநேரம் எதனையும் கலைரசனையோடு வருங்கால சந்ததிகளையும் கருத்தில்கொண்டு கட்டிடங்களை கட்டிய அதாஉல்லா வாழும் அக்கரைப்பற்றிலும் பாத்திருப்பு மண்டபம் கட்ட அடிக்கல் நடவாம் என்ற செய்திகேட்டு ஆச்சரியப்பட்டோம் காரணம் கொல்ல தெருவில் ஊசிவிக்கப்போகும் ஹரீஸ் வாங்கிக்கட்டப்போகிறார் என்பதனை நினைத்து 

இறக்காமம் பரவாயில்லை அக்கரைப்பற்றில் உள்ள மு கா போராளிகள் ஊரைத்திண்டு ஏப்பம்விட்டவர்கள் என்பது நினைவிருக்கலாம்