வஸீம் படுகொலை வழக்கில் திருப்பம்-அழிக்கப்பட்ட தகவல்கள் மீளவும் பெறப்பட்டுள்ளன!

waseemபிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு கொலை விசா­ர­ணை­களில் மேலும் முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது.

வஸீம் தாஜு­தீனின் கொலை இடம்­பெற்ற தினத்­தன்று நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் டேனியல் பெரே­ரா­வுக்கு ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இருந்து வந்த சந்­தே­கத்­துக்கு இட­மான அழைப்­புக்கள் குறித்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இம்­முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது. 

இந் நிலையில் இந்த அழைப்பை ஜனா­தி­பதி செயலகம் ஊடாக ஏற்­ப­டுத்­தி­யவர் யார் என்­பதைக் கண்டுபிடிக்க புல­னாய்வுப் பிரி­வினர் தீவிர விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

கொலை இடம்­பெற்ற  2012.05.17 அன்றும் அதற்கு முத்­திய தின­மான 2012.05.16 அன்றும் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் டேனியல் பெரே­ரா­வுக்கு 4 தொலை­பேசி அழைப்­புக்கள் ஜனா­தி­பதி செய­லகம் ஊடாக வந்­துள்­ள­தா­கவும் இதில் ஒரு அழைப்பு கொலை இடம்­பெற்ற தினத்­தன்று அதி­காலை 5.30 மணிக்கு வந்­துள்­ள­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ளது. 

தொலை­பேசி அழைப்­புக்கள் குறித்த மேல­திக விசா­ர­ணை­களில், ஜனா­தி­பதி செய­ல­கத்தின் அழைப்­புக்கள் பதி­வாகும் சி.பி.யூ. இயந்­தி­ரத்தில் இருந்த தக­வல்கள் அழிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவை மீளப் பெறப்­பட்­டுள்­ள­தாக நேற்று கொழும்பு மேல­திக நீதி­வா­னுக்கு அறிக்கை சமர்­ப்பித்த குற்றப் புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான அதி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் விம­ல­சிறி ரவீந்­திர, அத­னூ­டாக சந்­தே­கிக்­கத்­தக்க மேலும் நான்கு தொலை­பே­சிகள் தொடர்­பி­லான தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக நீதி­வா­னுக்கு அறிக்கை ஊடாக அறி­வித்­துள்ளார். 

வஸீம் தாஜுதீன் படு கொலை வழக்கு நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன் போது முறைப்­பாட்­டாளர் சார்பில் அரசின் பிரதி சொலி­சிற்றர் ஜெனரல் டிலான் ரத்­நா­யக்க ஆஜ­ரா­கி­யி­ருந்­த­துடன் விசா­ர­ணை­யா­ளர்கள் சார்பில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் விம­ல­சிறி ரவீந்­திர ஆஜ­ரா­கி­யி­ருந்தார். பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி மிஸ்பாஹ் சத்தார் ஆஜ­ரானார்.

இந் நிலையில் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­ன­போது குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் மேல­திக விசா­ரணை அறிக்கை மன்றில் சமர்­ப்பிக்­கப்­பட்­டது. 

அவ்­வ­றிக்­கையில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது,
வஸீம் தாஜு­தீனின் படு கொலை இடம்­பெற்ற 2012.05.17 அன்று நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யாக கட­மை­யாற்­றிய டேனியல் பெரே­ராவின் இலக்­கத்­துக்கு சந்­தே­கத்­துக்கு இட­மான நான்கு அழைப்­புகள் ஜனா­தி­பதி செய­ல­கத்­தி­லி­ருந்து மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.  இது தொடர்­பி­லான தக­வல்­களை தேடிய போது ஜனா­தி­பதி செய­ல­கத்தின் தொலை­பேசி பதி­வுகள் பதி­வா­கி­யி­ருந்த கணி­னியின் சி.பி.யூ.விலி­ருந்து  அழிக்­கப்­பட்­டி­ருந்­தன.

எனினும் நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய அந்த மென்­பொ­ருளை தயார் செய்த தனியார் நிறு­வ­னத்தின் பொறி­யி­ய­லாளர் ஊடாக அழிக்­கப்­பட்ட தக­வல்கள் மீளவும்  பெறப்­பட்­டுள்­ளன.

இதன் போது நார­ஹேன்­பிட்டி பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த டேனியல் பெரே­ரா­வுக்கு கொலை இடம்­பெற்ற தினம் அதி­காலை 5.30 மணிக்கு ஜனா­தி­பதி செய­லக தொலை­பேசி இலக்கம் ஊடாக அழைப்பு கிடைத்­துள்­ளமை தெரி­ய­வந்­தது.

இத­னை­விட  குறித்த சி.பி.யூ.விலி­ருந்து சந்­தே­கிக்­கத்­தக்க மேலும் நான்கு தொலை­பேசி இலக்­கங்கள் கண்­ட­றி­யப்­பட்­டன. வஸீமின் கொலை இடம்­பெற்ற காலப்­ப­கு­திக்குள் நான்கு தொலை­பேசி இலக்­கங்­க­ளுக்கும் சந்­தே­கத்­துக்கு இட­மான அழைப்­புக்கள் ஜனா­தி­பதி செய­லக தொலை­பேசி ஊடாக சென்­றுள்­ளன. இது குறித்து நாம் விசா­ர­ணை­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்ளோம்.

அத்­துடன் ஜனா­தி­பதி செய­ல­கத்தின் இலக்­கங்கள் ஊடாக அழைப்பை ஏற்­ப­டுத்­தியோர் யார் என்­பதை கண்­ட­றிய, அவ்­வி­லக்­கங்­க­ளுக்கு பொறுப்­பாக கட­மை­யாற்­றியோர் தொடர்­பி­லான விபரம் ஜனா­தி­பதி செய­ல­கத்தின் உள்­ளக விவ­கார முகா­மை­யா­ள­ரிடம் கோரப்­பட்­டுள்­ள­துடன் அவரின் அறிக்கை கிடைத்­த­வுடன் அடுத்த கட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நேற்று பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் சார்பில் மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி மிஸ்பாஹ் சத்தார், வழக்கின் இரண்­டா­வது சந்­தேக நப­ரான மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான முன்னாள் சிரேஷ்ட பி­ரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட காலப்­ப­கு­தி­களில் தேசிய வைத்­தி­ய­சா­லையின் கட்­டணம் அற­விடும் அறையில் சிகிச்சை பெறு­வது குறித்து வாதிட்டார். இது குறித்து கடந்த தவ­ணையின் போது, தேசிய வைத்­தி­ய­சாலை மற்றும் சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லை­யிடம் கோரிய அறிக்­கைகள் பற்றி இதன் போது அவர் கேள்வி எழுப்­பினார்.

இந் நிலையில் இப்­ப­டு­கொலை தொடர்­பி­லான முதல் சந்­தேக நபர் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் முன்னாள் குற்­ற­வியல் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரவுக்கு பிணை கோரப்பட்டது.

எனினும் பிணை கோரிக்கையை நிராகரித்த நீதிவான் நிஸாந்த பீரிஸ், சுமித் சம்பிக்க பெரேரா, அனுர சேனநாயக்க இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன் அன்றைய தினம் அனுர சேனநாயக்க தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவது, வைத்திய சபையின் விசாரணைகள் தாமதமடைவது குறித்து பொருத்தமான உத்தரவுகளை உரிய சட்டங்களை ஆராய்ந்து பிறப்பிப்பதாகவும் நீதிவான் அறிவித்தார்.

மீட்கப்பட்ட உடற்பாகங்கள் மீது டி.என்.ஏ. சோதனை

மாலபே தனியார் மருத்­துவ கல்­லூ­ரி­யான சைட்­ட­மி­லி­ருந்து புல­னாய்வுப் பிரி­வி­னரால் சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது மீட்­கப்பட்ட 26 உடற்­பா­கங்கள் மீது டி.என்.ஏ. சோதனை செய்­யவும் பொலிஸார் தீர்­மா­னித்­துள்­ளனர்.

வஸீம் தாஜுதீன் படு கொலை வழக்கு நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. 

இதன்­போது குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் சமர்­ப்பிக்­கப்­பட்ட மேல­திக விசா­ரணை அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

இவ்­வி­வ­காரம் குறித்து அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய மால­பேயில் உள்ள சைட்டம் எனும் தனியார் மருத்­துவக் கல்­லூ­ரியின் நூத­ன­சா­லையில் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்றி வளைப்பின் போது  வஸீம் தாஜு­தீ­னு­டை­ய­தாக இருக்­கலாம் எனும் சந்­தே­கத்தில் 17 தொடை எலும்­பு­களும்  7 நெஞ்சு எலும்­பு­களும் மேல­திக ஆய்­வுக்­காக எடுக்­கப்­பட்­டன. அவற்றில் வஸீம் தாஜு­தீ­னு­டைய உடற்­பா­கங்­களை உறுதி செய்ய டி.என்.ஏ. சோத­னையை ஜீன் டெக் நிறுவனம் ஊடாக நடத்த எதிர்­பார்க்­கின்றோம்.

இதற்­கான செல­வினங்கள் உள்­ளிட்­ட­வற்றை ஈடு செய்ய பொலிஸ் மா அதி­ப­ருடன் இது குறித்து ஆராய்ந்து நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளோம். இத­னை­விட குறித்த சுற்றி வளைப்பின் போது 19 பெட்­டி­களில் அடைக்­கப்­பட்ட உடற்­பா­கங்கள் பல­வற்றை முத்­தி­ரை­யிட்டு வழக்குப் பொருட்­க­ளாக மீள மன்­றிடம் கைய­ளித்­துள்ளோம்.

இந் நிலையில் குறித்த சுற்றி வளைப்பின் போது அந்த தனியார் மருத்­துவ கல்­லூ­ரியின் செயற்­திட்ட அதி­கா­ரி­யான விதாத் ஹுஸ்னி ரசீத்­திடம் நாம் வாக்கு மூலம் பதிவு செய்தோம்.  நான்கு நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் 2013.05.21 அன்று இந்த உடற்­பா­கங்­களை வைத்­திய நிபுணர் ஆனந்த சம­ர­சே­கர கல்­லூ­ரிக்கு கொன்டு வந்­த­தாக அவர் கூறி­ய­துடன்  கல்­லூ­ரியில் வைப்­ப­தற்­கான அனு­ம­தியை வெல்­லம்­பிட்டி பொலிஸார் ஊடாக பெற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் தேவை­யற்­ற­வற்றை தலஹேன் பொது மயா­னத்தில் புதைக்­கு­மாறும் கூறி கடந்த 2016.09.27 ஆம் திகதி முதல் விடு­மு­றையில் சென்­றுள்­ள­தா­கவும் அவர் வாக்கு மூலத்தில் கூறினார்.’ என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் வஸீமின் சடலம் மீது முதலில் பிரேத பரி­சோ­த­னையை முன்­னெ­டுத்த வைத்­தியர் ஆனந்த சம­ர­சே­க­ர­வுக்கு எதி­ராக வைத்­திய சபை முன்­னெ­டுத்து வரும் விசா­ர­ணைகள் தாம­த­ம­டை­வது குறித்து அரச சட்­ட­வாதி டிலான் ரத்­நா­யக்க சந்­தேகம் வெளி­யிட்டார்.

எனினும் வைத்­திய சபை சார்பில் ஆஜ­ரான சட்டத்தரணி வைத்தியர் ஆனந்த சமரசேகர மீதான விசாரணைகள் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் விசாரணையாளர்கள் தொடர்பில் திகதியை ஒதுக்கீடு செய்வதில் உள்ள பிரச்சினையே தாமதத்துக்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டினார்.