விக்ரமபாஹு கடும் விசனம் !

images (1)

பேரினவாத சக்திகளின் செல்வாக்கு நீதித்துறையையும் சிறைகளையும் ஊடுருவியுள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்ததுடன், அரசியல்  கைதிகளை விடுதலை செய்ய உடன் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார். மகசின் சிறையில் அரசியல் கைதியான சுந்தரம் சதீஷ் மரணமானது தொடர்பில் உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென கோரி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.