வடமாகாண சபை உறுப்பினர் அன்டனி ஜெகநாதன் இன்று காலை உயிரிழந்துள்ளார்

625_fotor

வடமாகாண சபை உறுப்பினர் அன்டனி ஜெகநாதன் இன்று காலை விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

இன்று காலை முல்லைத்தீவு பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். 

தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் அன்டனி ஜெகநாதனுக்கு திடீரென்று தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. 

இதன்போது அவர் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது

இதனையடுத்து விபத்தில் சிக்கிய அவர் உடனடியாக முல்லைத்தீவு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தார். 

எனினும் சிகிச்சை பலனின்று அவர் உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு மருத்துவமனை நிர்வாகம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.