விக்னேஸ்வரனிடம் ஏமாற வடக்கில் உள்ள மக்கள் தயாராக இல்லை : பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்டும் திட்டத்தை செயற்படுத்த முனைவதாகவும் அவரிடம் ஏமாற வடக்கில் உள்ள மக்கள் தயாராக இல்லை எனவும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

sarth-fonseka-c-v-vignes

களனியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஸ்வரன் வடக்கில் உள்ள தமிழ் மக்களை தூண்ட முயற்சிக்கின்றார். அவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாக மாற முயற்சித்தாலும் அந்த முயற்சி வெற்றியளிக்காது எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.