விமல் விசாரணைகளுக்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ விசாரணைகளுக்காக இன்றும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி காரியாலயத்திற்குச் சொந்தமான வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காகவே அவர் முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை குறித்த விசாரணைகளுக்காக கடந்த 14ஆம் திகதியும் விமல் வீரவன்ஸ பொலிஸ் நிதி மோசடிப்பிரிவில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.