முஸ்லிம்களுக்கு தனிஊடகமில்லா குறையை செய்தி தளங்கள் நிவர்த்தி செய்கின்றன

 
நிஜம் பத்திரிக்கை வெளியீட்டு நிகழ்வு அண்மையில் அக்கரைப்பற்றில் இடம்பெற்றது இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய எஸ் எம் சபீஸ் முஸ்லிம்களுக்கு தனியான ஊடகமில்லா குறையை செய்தித் தளங்கள் நிவர்த்தி செய்வதாக தெரிவித்தார் 
 
தொடர்ந்து அங்கு பேசிய  சபீஸ் தமிழில் இயங்கும் தேசிய ஊடகங்கள் முஸ்லிம்கள் தமிழ் பேசுகின்ற காரணத்தால் தமது ஊடகங்களில் எச்சங்களை மாத்திரம் வழங்குவதாக  தெரிவித்தார் அதாவது முஸ்லிம் மக்களை தமது தேவைகளுக்கு பயன்படுத்த பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல்களை முன்பக்க செய்தியாக பிரசுரிக்கும் தமிழ் ஊடகங்கள் தமது தேவைகள் முடிந்ததும் பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல்களை  மரண செய்திகள் பிரசுரிக்கும் பகுதிகளுக்கு பின்தள்ளுவதாக தெரிவித்தார்.
 
இக்குறைபாடுகளை இன்று வெப் தளங்களில் இயங்குகின்ற லங்கா புரன்ட், சோனகர் டாட் காம், ஸ்ரீலங்கா முஸ்லிம், மடவள செய்தி,  இம்போர்ட் மிரர், ஜப்னா முஸ்லிம், லங்கா ஸ்கை போன்ற செய்தி தளங்கள் நிவர்த்தி செய்வதாக தெரிவித்தார்