இங்கிலாந்து அணி 5-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரில் பாகிஸ்தானை வென்றது!

England v Pakistan - 5th One Day Internationalபாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன் குவித்தது. ஜேசன்ராய் 87 ரன்னும், ஸ்டோக்ஸ் 75 ரன்னும் எடுத்தனர். ஹசன் மாலிக் 4 விக்கெட்டும், முகமது அமீர் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

251669

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 48.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 304 ரன் எடுத்தது. 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சர்பிராஸ் அகமது 73 பந்தில் 90 ரன்னும் (10 பவுண்டரி, 1 சிக்சர்), சோயிப் மாலிக் 77 ரன்னும் எடுத்தனர்.
CRICKET-ENG-PAK-ODI
4 போட்டியில் தோற்று ஏற்கனவே தொடரை இழந்த பாகிஸ்தானுக்கு இது ஆறுதல் வெற்றியாகும். இங்கிலாந்து அணி 5-1 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரை வென்றது. டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

அடுத்து இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் வருகிற 7-ந் தேதி நடக்கிறது.