முஸ்­லிம்கள் குர்பான் கட­மை­யின்­போது நாட்டின் சட்ட விதி­களைப் பேண வேண்டும் :உலமா சபை

jammiyathul ulamaமுஸ்­லிம்கள் குர்பான் கட­மை­யின்­போது நாட்டின் சட்ட விதி­களைப் பேணு­வ­துடன் ஏனைய இன மக்­களின் உணர்­வு­க­ளையும் மதிக்க வேண்­டு­மென அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபை வேண்­டுகோள் விடுத்­துள்­ள­துடன் கூட்­டுக்­குர்­பானை வர­வேற்­றுள்­ளது.

இதேவேளை, கொழும்பு பிர­தேச மக்­களின் நலன்­க­ருதி 12 மஸ்­ஜி­து­களின் சம்­மே­ளனம் ஒன்­றி­ணைந்து கூட்­டுக்­குர்­பா­னுக்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் வழி­காட்­டல்­களின் கீழ் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள இந்தத் திட்டம் சமூ­கத்தில் ஒற்­று­மை­யைப் பலப்­ப­டுத்­து­கி­றது எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த வருடம் கொழும்பு மஸ்­ஜி­துகள் சம்­மே­ளனம் ஏற்­பாடு செய்­தி­ருந்த கூட்டுக் குர்பான் திட்­டத்தின் கீழ் 309 மாடுகள் அறுக்­கப்­பட்­டன. 1844 பங்­குகள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டன. இதே­வேளை கூட்­டுக்­குர்­பானில் மக்கள் அதிக அக்­கறை செலுத்­து­வ­தில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கொழும்புப் பகு­தியில் மஸ்­ஜி­துகள் சம்­மே­ளனம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள கூட்­டுக்­குர்­பா­னுக்கு கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­வரை 66 மாடு­க­ளுக்கே மக்கள் பங்­க­ளிப்புச் செய்­துள்­ளார்கள். இது 461 பங்­கு­க­ளாகும். 

இவ்­வ­ருடம் கொழும்பு பகு­தி­யி­லுள்­ள­வர்கள் பலர் திருகோணமலை, கந்தளாய், மன்னார் போன்ற பகுதிகளுக்குச் சென்று அங்கு குர்பான் கடமையை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளமை இதற்கான காரணமாகும்.