பொகவந்தலாவையில் கிடங்கிலிருந்து சடலம் மீட்பு!

க.கிஷாந்தன்

கீரை பிடிங்க சென்றனர் கிடங்கில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில் 28.08.2016 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

DSC00887

இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,

மாணிக்ககல் அகழ்வில் தொழிலை மேற்கொள்ளும் தெரேசியா தோட்டத்தை சேர்ந்த எம்.தெய்வேந்திரன் வயது 43 என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

அதேவேளை கீரை பிடிங்க சென்ற இவர் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. ஆனால் வீட்டில் உள்ளவர்கள் இவர் மாணிக்ககல் அகழ்வு தொழிலுக்கு சென்றிருக்கலாம் என நினைத்துள்ளனர்.

DSC00873

அதிகாலை வரை வீடு திரும்பாத இவர் தொடர்பில் உறவினர்கள் தேடுதலை மேற்கொண்டுள்ளனர். இருந்தபோதிலும் 29.08.2016 அன்று காலை இவரை தேடி சென்ற வழியில் ஏற்கனவே சட்டவிரோதமான மாணிக்ககல் அகழ்வு தோண்டப்பட்டிருந்த கிடங்கு ஒன்றில் இவர் உயிரிழந்து கிடப்பதை உறவினர்கள் கண்டுள்ளனர்.

DSC00883

இது தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை அட்டன் நீதவான் ஸ்தலத்திற்கு விரைந்து மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். அதன் பின் சடலம் தொடர்பான சட்ட வைத்திய அறிக்கையை பெறுவதற்கு இந்த சடலம் நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.