மஹிந்த ஆதரவாளர்கள் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கத் திட்டம் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்கள் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

mahinda
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிளவடைந்த தரப்பினர் இவ்வாறு புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்க உள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெயருக்கு நிகரான பெயர் ஒன்றில் இந்தக் கட்சி இயங்க உள்ளது.
புதிய அரசியல் கட்சியொன்றை அமைப்பது தொடர்பில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெசில் ராஜபக்ஸ, ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழப்பெரும, பவித்ரா வன்னியாரச்சி, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இது குறித்து அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.