அட்டனில் பிரதமர் ரணில்….!

க.கிஷாந்தன்

pm (1)_Fotor

மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மையான அங்கத்துவத்தினை பெற்றுக் கொள்ளும் முகமாக ஐ.தே.கட்சியின் தலைவரும், நாட்டின் பிரதமமந்திரியுமான ரணில் விக்கிரமசிங்க 28.08.2016 அன்று அட்டன் நகருக்கு விஜயத்தினை மேற் கொண்டார்.

 

ஐக்கிய தேசிய கட்சியின் மஸ்கெலியா தேர்தல் தொகுதி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வைபவத்தை அம்பகமுவ பிரதேச சபை ஐ.தே.காவின் பிரதம அமைப்பாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே பியதாஸ நெரிப்படுத்தினார்.

pm (19)_Fotor

அட்டன் விஜிதா திரையரங்கின் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் வைபத்திற்கு நாட்டின் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களான பழனி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், எம்.திலகராஜ் ஆகியோருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அட்டன் நகரில் அங்கத்துவத்தை இணைத்துக்கொள்ளும் அங்கத்துவ சிட்டை வழங்கி பேரணி ஒன்றும் இடம்பெற்றது. 

pm (22)_Fotor

அதேவேளை பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க சுகயீனம் காரணமாக இவ் வைபவத்திற்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.