கூட்டு எதிர்க்கட்சியின் மேலும் உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சி பதவிகளிலிருந்து விலகத் தீர்மானம்!

150303102658_slfp_512x288_slfp

கூட்டு எதிர்க்கட்சியின் மேலும் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.

ஏற்கனவே கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஏனைய சில சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களும் பதவி விலகத் தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் வாரங்களில் இவர்கள் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரஞ்சித் டி சொய்சா, மஹிந்தானந்த அலுத்கமகே, குமார வெல்கம போன்றவர்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.