சம்மாந்துறை பிரதேசசபையில் பிரியாவிடை நிகழ்வு!

 

1 (1)_Fotor

எம்.வை.அமீர்

2015-05-15 ல் அநேகமான உள்ளுராட்சி சபைகள் கலைக்கப்பட்டு விசேட ஆணையாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சம்மாந்துறை பிரதேசசபையில் 2015-05-15 ல் உணர்வுப்பூர்வமான பிரியாவிடை நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேசசபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம் அவர்களது தலைமையில், பிரதேசசபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட், சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபையின் நிருவாக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர்களால் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

aa_Fotor 2 (1)_Fotor 7_Fotor