மத்திய வங்கியின் அதிகாரிகள் கோப் குழுவில் முன்னிலையாக வேண்டும்: அசோக அபேசிங்க

central-bank-of-sri-lanka

மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உட்பட மத்திய வங்கி அதிகாரிகளை இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கோப் குழுவில் முன்னிலையாகுமாறு பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி அதிகாரிகளுடன் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே இன்று கோப் குழுவில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய வங்கியின் திரைசேரி செயலாளர் மற்றும் நிதி குழு உறுப்பினர்களையும் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை தொடர்பிலான அறிக்கையை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.