எப்படியான தகவல்களை வெளியிட்டாலும் தான் ஐ.தே.கட்சிக்கு எதிராக செயற்பட போகின்றேன்

எப்படியான தகவல்களை வெளியிட்டாலும் தான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக செயற்பட போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.

மாத்தறையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலையில், 

புதிய கட்சி ஒன்றை தொடங்கினால், கூட்டு எதிர்க்கட்சி குறித்து தனக்கு தெரிந்த தகவல் ஒன்றை வெளியிட தயார் என கடுவலை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஜீ.எச். புத்ததாச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கடுவலை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் கண்ணாடி மாளிகைகளில் இருந்து கல்லெறிய தயாராகி வருவதாகவும் கண்ணாடி மாளிகையில் இருந்து கல்லெறிய வேண்டாம் எனவும் புத்ததாச குறிப்பிட்டுள்ளார்.