கூட்டு எதிர்க் கட்சி ஜனா­தி­ப­திக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது !!

அமெ­ரிக்கா மற்றும் நோர்வே உள்­ளிட்ட பிரி­வி­னை­வா­தி­களின் தேவைக்­கா­கவே அர­சாங்கம் காணாமல் போன­வர்கள் தொடர்­பான  அலு­வ­லகம் அமைக்கும் சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்­றி­யுள்­ளது.

ஜனா­தி­ப­திக்கு கிடைத்­துள்ள இறுதி சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி சட்­ட­மூலம் நடை­மு­றைக்கு வரு­வதை தடுக்க வேண்டும் .

இல்­லை­யெனில் வர­லாறு காணாத பாரிய போராட்­டங்­களை எதிர் கொள்ள நேரிடும் என கூட்டு எதிர்க் கட்சி எச்­ச­ரித்­துள்­ளது.

விடு­தலைப் புலி­க­ளுடன் குடும்ப உறவு முறை­களை கொண்­டி­ருந்த நாடுகள் இலங்­கையை பிள­வு­ப­டுத்­தவும் போருக்கு தலைமை தாங்­கி­ய­வர்­களை விஷேட நீதி­மன்­றத்­திற்கு கொண்டு சென்று தூக்­கி­லி­ட­வுமே காணாமல் போன­வர்கள் தொடர்­பான அலு­வ­லகம் அமைக்­கப்­ப­டு­கின்­றது. இந் நிலையில் நல்­லி­ணக்க சட்­ட­மூ­லத்தையும் விஷேட நீதி மன்­றுக்­கான சட்­ட­மூ­லத்­தையும் மிக விரைவில் கொண்டு வரு­வ­தற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் கூட்டு எதிர்க் கட்சி குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

பத்­த­ர­முல்லை – நெலும் மாவத்­தையில் அமைந்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அலு­வ­ல­கத்தில் நேற்று திங்கட் கிழமை இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.

resize_20110819014815

இதன் போது உரை­யாற்­றிய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல கூறு­கையில் ,

காணாமல் போன­வர்கள் தொடர்பில் விசா­ரணை நடத்தி உண்­மை­களை கண்­டு­பி­டிக்க வேண்டும் என்­பதில் எவ்­வி­த­மான மாற்றுக் கருத்­திற்கும் இட­மில்லை. ஆனால் வடக்கு மற்றும் கிழக்­கிற்கு மாத்­திரம் விஷே­ட­மாக செயற்­ப­டு­வது பல்­வேறு சந்­தே­கங்­க­ளுக்கு கார­ண­மா­கி­யுள்­ளது.

காணாமல் போன­வர்கள் தொடர்­பாக அலு­வ­லகம் அமைக்கும் சட்­ட­மூலம் எதிர்­வரும் 23 ஆம் திக­தியே பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்டு வரப்­ப­ட­வி­ருந்­தது. ஆனால் நல்­லாட்சி அர­சாங்கம் கப­டத்­த­ன­மாக செயற்­பட்டு கடந்த வாரத்தில் பாரா­ளு­மன்­றத்தில் அந்தச் சட்­ட­மூ­லத்தை சமர்­பித்து 45 நிமி­டத்தில் நிறை­வேற்­றி­யது.

அந்த 45 நிமிடம் நாட்டின் எதிர்­காலம் உள்­ளிட்ட பல்­வேறு தியா­கங்­க­ளுக்கு மத்­தியில் பெற்றுக் கொண்ட போர் வெற்­றி­யினை சூன்­ய­மாக்கி இரா­ணு­வத்தை தூக்­கி­லி­டு­வ­தற்கு அடித்­த­ள­மாக அமையும் என யாரும் சிந்­திக்­க­வில்லை. 

பாரா­ளு­மன்­றத்தை மிகவும் மோச­மான முறையில் வழி­ந­டத்­தியே இந்தச் சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டது. நிறை­வேற்­றப்­பட்ட சட்­ட­மூ­லத்தின் ஊடாக காணாமல் போன­வர்கள் தொடர்­பான அலு­வ­ல­கத்­திற்கு வழங்­கப்­படும் அதி­காரம் எல்­லை­யற்­றது. உச்ச நீதி­மன்­றத்தால் கூட தகவல் கேட்க முடி­யா­த­ள­விற்கு அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. 

யாரை வேண்­டு­மென்­றாலும் விசா­ரணை  செய்­யவும் , எந்த இடத்­திற்கும் செல்­லவும் அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான விசா­ரணை நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு 48 மணித்­தி­யா­லத்­திற்கு பின்­னரே பொலிஸ் மா அதி­ப­ருக்கு அறி­விக்­கப்­பட வேண்டும்.

அதே போன்று காணாமல் போன­வர்கள் தொடர்­பாக சாட்­சி­களின் இர­க­சிய தன்மை வெளி­யி­டப்­ப­ட­மாட்­டாது. சர்­வ­தே­சத்­தி­ன­ருடன் ஒப்­பந்­தங்கள் செய்து கொள்­ளவும் நிதி பெற்றுக் கொள்­ளவும் அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது .

இதில் மிகவும் மோச­மான நிலைமை என்­ன­வென்றால் சாட்சி ஆதா­ரங்கள் விஷேட தரப்­பிற்கு வழங்­கப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இறுதிக் கட்ட போரில் ஈடு­பட்ட இரா­ணு­வத்­தையும் அதற்கு அர­சியல் தலை­மைத்­து­வத்தை வழங்­கி­ய­வர்­களை குறி வைத்­துமே செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. விரைவில் நல்­லி­ணக்கம் மற்றும் விஷேட நீதி­மன்­றுக்­கான இரு­வேறு சட்­ட­மூ­லங்­களை கொண்­டு­வ­ரு­வ­தற்கு முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

அமெ­ரிக்கா மற்றும் நோர்வே போன்ற நாடுகள் தொடர்ந்தும் பிரி­வி­னை­வா­தத்­திற்கு துணை போகின்­றன.

குறிப்­பாக நோர்வே விடு­தலைப் புலி­க­ளுடன் குடும்ப உறவு முறையை கொண்­டி­ருந்­தது. அதே போன்று அமெரிக்காவும் சிவப்பு இந்தியர்களுக்கு எதிராக எவ்வாறு ஆயுதமற்ற போரில் ஈடுபட்டதோ அதனையே தற்போது இலங்கையில் செய்ய முற்படுகின்றது.

ஆனால் காணாமல் போனவர்கள் தொடர்பான  அலுவலக நடவடிக்கைகளை தடுப்பதற்கு அனைத்தையும் செய்வோம். நாட்டிற்கு எதிராக சதி நடக்கும் போது அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம்.

இவற்றை ஜனாதிபதி அவதானத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.