ஜனாதிபதி தலைமையில் அவசர கலந்துரையாடலுக்கு கூடும் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதன்போது, அக் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து பேசப்படவுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

விஷேடமாக நேற்று நடைபெற்ற பாத யாத்திரை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.