மாத்தறையில் ஜனாதிபதி, பிரதமரின் பங்குபற்றலுடன் தேசிய அரசின் ஒரு வருட பூர்த்தி விழா

 

தேசிய அரசு உதயமாகி எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்ற நிலையில், அதைக் கொண்டாடுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 19 ஆம் திகதி மாத்தறையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட தேசிய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பங்கேற்கவுள்ளனர்.

இதன்போது தேசிய அரசின் ஐந்தாண்டு கால பொருளாதார திட்டமும், கொள்கைகளும் வெளியிடப்படவுள்ளன என்று அறியமுடிகின்றது.