உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்த வேண்டாம் – மஹிந்த தேசப்பிரிய

mahinda-deshapriya-election-commior

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை காலம் தாழ்த்த வேண்டாம் என சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தாபவுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை மேலும் காலம் தாழ்த்துவது பொருத்தமாகாது என அவர் தெரிவித்துள்ளார்.
நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக தேர்தல்களை நடாத்துவதில் காலம் தாழ்த்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறனெனினும் 335 உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிக் காலம் பூர்த்தியாகியுள்ள நிலையில், தேர்தல்களை துரித கதியில் நடத்த வேண்டிய அவசியம் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.