பாதயாத்திரையானது தோல்வியையே சந்திக்கும்: மாவை சேனாதிராஜா

mavai-senathirajaதற்போதைய அரசாங்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூட்டு எதிர்கட்சியினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் பாதயாத்திரையானது தோல்வியையே சந்திக்கும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே இவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் தற்போது தமிழ் மக்களின் குறைகளை கேட்க ஆரம்பித்துவிட்டது ஆனால், அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு கூட்டு எதிர்கட்சி இடையூறு விளைவித்துக் கொண்டே வருவதாகவும் சேனாதிராஜா கூறியுள்ளார்.

எனவே நல்லிணக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.