அனைத்து இனங்­க­ளுக்கும் பிர­தி­நி­தித்­துவம் கிடைக்கும் வகையில் எல்லை நிர்­ண­யங்கள் திருத்­தப்­பட்டு வரு­கின்­றன: பைசர் முஸ்­தபா

கடந்­த­கால ஆட்­சியின் போது மேற்­கொள்­ளப்­பட்ட எல்லை நிர்­ண­யங்கள் சிறு­பான்மை பிர­தி­நி­தித்­து­வத்தை இல்­லாமற் செய்யும் வகை­யிலே அமைந்­துள்­ளன.

faizer musthafa

ஒரு கட்­சிக்கு சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ரவு கிடைக்­காது என்­ப­த­னாலே இவ்­வாறு எல்லை நிர்­ண­யங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

அனைத்து இனங்­க­ளுக்கும் ஆட்­சியில் பிர­தி­நி­தித்­துவம் கிடைக்கும் வகையில் தற்­போது எல்லை நிர்­ண­யங்கள் திருத்­தப்­பட்டு வரு­கின்­றன என மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்தார். 

நேற்­றுக்­காலை கொழும்­பி­லுள்ள மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கையில் அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, உரிய முறையில் எல்லை நிர்­ண­யங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டாலே சிறு­பான்மை மக்­க­ளுக்­கான பிர­தி­நி­தித்­து­வங்­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும்.

சிலர் நான் வேண்­டு­மென்றே எல்லை நிர்­ண­யத்தைக் காரணம் காட்டி தேர்­தலைப் பிற்­போட்டு வரு­வ­தாக குற்றம் சுமத்­து­கின்­றனர்.

தேர்தல் உரி­ய­கா­லத்தில் நடத்­தப்­ப­ட­வில்லை என உயர் நீதி­மன்­றத்தில் வழக்கும் தொடர்ந்­தி­ருக்­கி­றார்கள். அது  அவர்­க­ளது உரிமை. 

எல்லை நிர்­ண­யங்­களில் வட­கி­ழக்கில் பல பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்­டி­யுள்­ளன. எல்­லை­நிர்­ணய முறைப்­பா­டு­களை ஆராயும் குழு அடுத்­த­வா­ர­ம­ளவில் வட, கிழக்­கிற்கு விஜயம் செய்து தனது பணி­களை  ஆரம்­பிக்­க­வுள்­ளது.

எல்லை நிர்­ண­யங்­களில் மாற்­றங்­களைச் செய்ய வேண்­டி­யுள்­ள­துடன் 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர் அதி­கார சபைகள் தேர்­தல்கள் (திருத்தச்) சட்­டத்­திலும் சில திருத்­தங்கள் செய்­யப்­பட வேண்­டு­மென நிய­மிக்­கப்­பட்­டுள்ள அமைச்­ச­ரவை உப­குழு தெரி­விக்­கி­றது. 

டெங்கு நுளம்பு பெருகும் பகு­தி­க­ளி­லுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு டெங்கு பர­வு­வதை கட்­டுப்­ப­டுத்­து­மாறு அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. கட்­டி­டங்கள் நிர்­மா­ணிக்கும் பகு­தி­க­ளிலே அதி­க­மாக டெங்கு நுளம்பு பெருகி வரு­கி­றது.

அப்­ப­கு­தி­களில் 45% நுளம்பு பெருக்கம் காணப்­பட்டால் குறிப்­பிட்ட கட்­டிட நிர்­மாண அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை இரத்துச் செய்­வ­தற்கும் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. 

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் கால­வ­தி­யாகி தற்­போது ஆணை­யா­ளர்கள் மற்றும் செய­லா­ளர்­களின் கீழ் நிர்­வாகம் நடை­பெற்­று­வ­ரு­கி­றது.

மக்கள் பிர­தி­நி­தி­களின் நிர்­வா­கத்தை விட தற்­போது உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் நிர்­வாகம் திற­மை­யாக நடை­பெற்­று­வ­ரு­கி­றன. 

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் உறு­தி­ய­ளித்­த­படி எதிர்­வரும் சிங்­கள தமிழ் புத்­தாண்­டிற்கு முன்பு நடாத்­தப்­படும். இதில் எவரும் சந்­தேகம் கொள்ளத் தேவை­யில்லை.

இணைந்த  எதிர்க்­கட்­சி­யினர் பாத­யாத்­தி­ரை­களை மேற்­கொள்­வதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை பிள­வு­ப­டுத்­தி­விட முடியாது என்றார்.