பசில் ராஜபக்ஸ வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை..!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ வழக்கு விசாரணையில் ஆஜராகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

basil

கொழும்பு உயர் நீதிமன்றில் இன்றைய தினம் பசில் ராஜபக்ஸ ஆஜராக வேண்டியிருந்தது.

திவிநெகுமு திட்டத்தில் 29 மில்லியன் ரூபா அரச பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மற்றுமொரு மோசடி தொடர்பில் ஏற்கனவே பசில் கைது செய்பய்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனால் குறித்த வழக்கில் ஆஜராக முடியவில்லை பசில் ராஜபக்ஸவின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திவிநெகும திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரனவக்கவும் இந்த வழக்கில் இன்றைய தினம் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.