தொழில் கல்­வியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பாட­சாலை பாட விதானங்கள் மாற்றப்படும் :அகில விராஜ் காரி­ய­வசம்

tkn-akilaviraj-war

தொழில் கல்­வியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பாட­சாலை பாட விதா­னங்­களில் தீர்­மா­ன­மிக்க மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

அதன்­மூலம் தகை­மை­க­ளுக்கு ஏற்ப தொழில்­வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி வேலை­யில்லா பிரச்­சி­னைக்கு தீர்வு காண­மு­டியும் என கல்­வி­ய­மைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்­துள்ளார்.

குளி­யாப்­பிட்டி தொழில்­நுட்பக் கல்­லூ­ரியில் தொழில்­நுட்ப கற்­கை­நெ­றியைப் பூர்த்­தி­செய்­த­வர்­க­ளுக்­கான சான்­றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

எமது நாட்டில் அமு­லி­லி­ருக்கும் கல்வி முறை­மைக்கும் தொழில் சந்­தைக்­கு­மி­டையில் நீண்ட இடை­வெ­ளி­யுள்­ளது.

அந்­நி­லை­யினைப் போக்கி எதிர்­கா­லத்தில் தொழில் கல்­வியை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. அதற்­காக நீண்ட கால தொழிற்­துறை பாட­நெ­றி­களை அறி­முகம் செய்து சகல வச­தி­க­ளையும் வழங்கி தொழில் கல்­வியை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

ஆகவே கல்­வி­ய­மைச்சு மேற்­கொள்ளும் ‘லங்­கம பாசல ஹொந்­தம பாசல’ செயற்­றிட்­டத்தின் மூலம் சகல கிரா­மங்­க­ளிலும் பாரி­ய­ள­வி­லான அபி­வி­ருத்தி மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. அதற்­காக அர­சாங்கம் பெருந்­தொகை நிதியை ஒதுக்­கீடு செய்­துள்­ளது. 

மேலும் எதிர்­வரும் செப்­டம்பர் மாத­ம­ளவில் குளி­யாப்­பிட்­டியில் ஆரம்­பிப்­ப­தற்கு எதிர்­பார்க்­கப்­படும் வொக்ஸ்­வகன் தொழில்­பட்­ட­றை­யுடன் தொடர்­பு­டைய மோட்டார் தொழில்­நுட்ப பயிற்சி நிலையம் ஒன்றும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

மேலும் நாடு பூரா­கவும் தொழில் பயிற்சி நிலை­யங்­களை அமைத்து மாணவர்களைப் பயிற்றுவித்து அவர்களின் தகைமைகளுக்கு ஏற்ப தொழில்வாய்ப்புகளை அமைத்துக் கொடுப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.