இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய இஸ்­லா­மிய மாநாட்­டிற்கு சிங்­கப்பூர் அர­சாங்கம் முழு ஆதரவு !

இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள தெற்­கா­சிய இஸ்­லா­மிய மாநாட்­டிற்கு சிங்­கப்பூர் அர­சாங்கம் முழு­மை­யான ஆத­ரவை வழங்கும் என அந்­நாட்டு பிர­தமர் லீ ஷியேன் லுங் தெரி­வித்­துள்ளார்.

நேற்று முன்­தினம் பிர­தமர் ரணில் விக்­ரம சிங்­க­வுடன் இடம்­பெற்ற சந்­திப்­பின்­போதே அவர் இதனை தெரி­வித்­துள்ளார். இதேவேளை, இலங்கை மற்றும் சிங்­கப்பூர் ஆகிய நாடு­க­ளுக்­கி­டையில் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்கை தயா­ரித்து அமுல்ப்­ப­டுத்த ஆரம்­பித்­த­வுடன்  பொரு­ளா­தார, சமூக ரீதி­யாக பாரிய வெற்­றி­களை இரு­நாடும் பெற்­றுக்­கொள்ளும் எனவும் அவர் தெரி­வித்தார்.

மூன்று நாள் விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு சிங்­கப்பூர் சென்­றுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நேற்று சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­திய போதே அந்­நாட்டு பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன்­போது இஸ்­தானா மாளி­கையில் சிங்­கப்பூர் பிர­த­ம­ரினால் மகத்­தான வர­வேற்பு அளிக்­கப்­பட்­ட­துடன் இரா­ணுவ அணி­வ­குப்பும் வழங்­கப்­பட்­டது.

அங்கு சிங்­கப்பூர் பிர­தமர் லீ ஷியேன் லுங் மேலும் குறிப்­பி­டு­கையில்,
நீண்ட கால­மாக இரண்டு நாட்­டுக்கும் இடை­யி­லான மிகவும் வலு­வான நட்­பு­றவு காணப்­ப­டு­கின்­றது. கடந்த 40 ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஆரம்­பிக்­கப்­பட்ட பிறிமா நிறு­வனம் தற்­போது இலங்கை நிறு­வனம் என்ற அள­விற்கு மக்­க­ளுக்கு நெருக்­க­மா­கி­யுள்­ளது.

மேல் மாகாண மெகா பொலிஸ் திட்டம் மற்றும் திரு­கோ­ண­மலை அபி­வி­ருத்தி திட்­டங்கள் சிங்­கப்பூர் சுபோனா ஜூரோங் நிறு­வ­னத்தின் ஊடாக நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்ளோம்.

மேலும் சுற்­றுலா அபி­வி­ருத்­தியின் போது சிங்­கப்பூர் முத­லீட்­டா­ளர்­க­ளு­டான தொடர்பை வலுப்­ப­டுத்த முனை­வ­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இதன்­போது குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதே­வேளை, தென் ஆசி­யாவின் இஸ்­லா­மிய விசேட மாநாடு ஒன்­றினை நடத்­து­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் தயா­ராகி வரு­கின்­றது.

குறித்த மாநாட்­டிற்கு நாம் பூரண ஆத­ர­வினை வழங்­க­வுள்ளோம் என்றும் சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்தார்.