மருதமுனை ஹரீஷாவின் ‘உன் மொழியில் தழைக்கிறேன்’ கவிதை நூல் வெளியீட்டு விழா!

 

book final - Copy_Fotor
பி.எம்.எம்.ஏ.காதர்

எழுத்தாளர் மர்ஹூம் எம்.எச்.எம்.ஷம்ஸ் நினைவரங்கில் மருதமுனை ஹரீஷாவின் ‘உன் மொழியில் தழைக்கிறேன்’ கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(24-07-2016)மாலை 3.00 மணிக்கு மருதமுனை பொது நூலக வளநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

2-cover final_Fotor

எழத்தாளரும்,உதவிக் கல்விப் பணிப்பாளருமான கலாநிதி சத்தார் எம்;.பிர்தௌஸ் தலைமையில் இந்த கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் கலந்து கொள்;ளவுள்ளார்.

கௌரவ அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா கலந்து கொள்ளவுள்ளார் விஷேட அதிதியாக கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி கலந்து கொள்;ளவுள்ளார்.

ஊடவியலாளரும்,எழுத்தாளரும்,விமர்சகருமான ஆசிரியர் ஜெஸ்மி எம்.மூஸா நூல் நயவுரை நிகழ்த்தவுள்ளார்,ஊடகவியலாளரும்,எழுத்தாளருமான அப்துல் ஜப்பார் சமீம் வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார். சிரேஷ்ட ஒலிபரப்பாளரும், பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளருமான பஷீர் அப்துல் கையூம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளர்

HAREESHA_Fotor

நூலின் முதற் பிரதியை மருதமுனை பறக்கத் டெக்ஸ் பிறைவட் லிமிட்டட் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.பரீட்,விஷேட பிரதியை மருதமுனை சறோ பாம்ஸ் பிறைவட் லிமிட்டட் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.தாஜூதீன்,சிறப்புப் பிரதியை கல்முனை ஏ.எம்.எம்.இண்ஜினியரிங் கண்ஸ்ரக்ஷன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.முஸம்மில் ஆகியோர் பெறவுள்ளனர்.

தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனம் இந்த விழாவை நடாத்தி நூலை வெளியிட்டு வைக்கவுள்ளது.