நாமல் ராஜபக்சவுக்கு 70 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டதற்கான சாட்சியங்கள் உள்ளன :எஸ்.பி. திஸாநாயக்க

நாமல் ராஜபக்சவுக்கு 70 மில்லியன் ரூபா பணம் வழங்கப்பட்டதற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும் அவர் அந்த பணத்தை என்ன செய்தார் என்று கூறினால் விசாரணை  முடிந்து விடும் எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

S.B.Disanayake

பன்னல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நடமாடும் சேவை ஒன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூட்டு எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகள் பழங்குடியினரின் செயற்பாடுகளை போல் உள்ளன.

புதிய அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்வதற்கு உதவுவதற்கு பதிலாக, அவர்களின் குற்றங்கள், கொள்ளை மற்றும் ஊழல்களை மறைத்துக் கொள்ள எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு குரைக்கின்றனர் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க கூறியுள்ளார்.