தமிழக மீனவர்களுக்கு மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்கப் போவதில்லை: மகிந்த அமரவீர

தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி வழங்கப் போவதில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர் தெரிவித்துள்ளார். 

mahintha amaraweera
 
குறிப்பிட்ட சில தினங்களுக்கு வடமாகாண கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட தமிழக மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படவிருப்பதாக, இந்திய ஊடகங்கள் சில வெளியிட்டிருந்த செய்திகளை அமைச்சர் மறுத்துள்ளார்.  வடமாகாண கடற்பரப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படும் தீர்மானம் எவையும், வடமாகாண மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியே மேற்கொள்ளப்படும் என்றும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.