பசில் ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்களை வெளியிட்ட அமைச்சர்

முன்னாள் பொருளாதார அமைச்சரான பசில் ராஜபக்ஷ கடந்த ஆட்சி காலங்களில் ஏனைய உறுப்பினர்களை அச்சுறுத்தியுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், தன்னையும், பாராளுமன்ற உறுப்பினர் அநுர திசாநாயக்கவையும் கோப் குழுவில் வைத்து பசில் ஒரு தடவை தாக்க முற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் கடந்த ஆட்சியில் இவற்றுக்கு எந்த பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் இன்று தாங்கள் கோப் குழுவிற்கு பாதுகாப்பு வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல் எத்தனையோ ஊடக நிறுவனங்களை தாக்கி, எரித்தும் உள்ளார்கள். இதற்கு என்ன தீர்வு எடுக்கப்பட்டது?

அதற்கு இது வரையிலும் ஒரு தீர்வும் பெற்றுத்தரவில்லை. இதன் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வருவதற்கு மக்கள் பயப்படுகிறார்கள்.

இதேவேளை, சிறு குழந்தைகள் கூட ராஜபக்ஷக்கள் பெயரைக் கேட்டு பயப்படுவதாகவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.