பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும உள்ளிட்ட நால்வர் கைது

பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

களுத்துறை- மீகாதென்ன பாடசாலை ஒன்றில் மாணவர்களை பலவந்தமான முறையில் இணைத்துக்கொள்ள முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாதாக, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 மாணவர்களின் பெற்றோர்கள் இன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.