கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்ற தலைப்பிறை பார்க்கும் மாநாடு

 ஏ.எஸ்.எம்.ஜாவித்
 புனித ரமழான் மாத்தின் ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இன்று மாலை இடம் பெற்றது.

WP_20160705_19_07_11_Pro_Fotor

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜமியதுல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள், சகல பள்ளிவாசல்களினதும், தரீக்காக்களினதும், ஷாவியாக்களினதும் நிருவாக சபை உறுப்பினர்கள், உலமாக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது நாட்டின் பல பாகங்களிலும் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதால் நாளை புதன் கிழமை (06) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடலாம் என பிறைக் குழு ஏகமனதாக தீர்மாணித்துள்ளது. இதன்படி இலங்கை வாழ் சகல முஸ்லிம்களையும் நாளை புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறு பிறைக்குழு கேட்டுக் கொள்கின்றது.

WP_20160705_19_01_32_Pro_Fotor