முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் புதிய ஆளுனருக்கு வாழ்த்து தெரிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு, முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இவ்வாறு அர்ஜூன் மகேந்திரன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது முகநூலின் ஊடாக புதிய ஆளுனருக்கு அர்ஜூன் மகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நியமனக் கடிதத்தை கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி பெற்றுக் கொள்ளும் புகைப்படத்துடன் வாழ்த்து கூறி மகேந்திரன் முகநூலில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.