மீளவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோரிக்கையை நிராகரித்தார் – ஜனாதிபதி

மீளவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இது தொடர்பிலான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா இது குறித்த யோசனையை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் 2020ம் ஆண்டில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடுமாறு டிலான் பெரேரா, ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

எவ்வாறெனினும் மீளவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற வாக்குறுதியை தாம் மீறப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.