எனது பதவிக் காலத்தில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தவில்லை – கோதபாய ராஜபக்ஸ

பாதுகாப்புச் செயலாளராக தாம் கடமையாற்றிய காலத்தில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொத்தணி குண்டுகளை கொள்வனவு செய்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று யுத்தம் இடம்பெற்ற போதும் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கொத்தணி குண்டுகள் பற்றிய புகைப்படங்களை பிரசூரிப்பது கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியமைக்கான ஆதாரமாக கருதப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க வேறும் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.