மஹியங்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஞானசார தேரர்

மஹியங்கனையில் இடம்பெற்ற கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் ஒன்றில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் பங்கெடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து தெரியவருவதாவது,

மஹியங்கனையில் இன்று பொதுமக்கள் சிலரும் பௌத்த தேரர்களும் இணைந்து கடையடைப்பு மற்றும் கறுப்புக் கொடியினை பறக்கவிட்டு சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கு திடீரென வருகை தந்த ஞானசார தேரர் போராட்ட காரருடன் கலந்து கொண்டு கூடாரத்தினுள் அமர்ந்து கொண்டதுடன், ஊடகங்களுக்கும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.