பாணந்துறையில் 9 பங்களாதேஷ் பிரஜைகள் கைது

சட்டவிரோத கடவுச்சீட்டுகளுடன் 9 பங்களாதேஷ் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறையில் வைத்தே இன்று இவர்களை கைது செய்துள்ளதாக பாணந்துறை பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்களது வீசா காலம் முடிவடைந்துள்ள நிலையிலே இவர்கள்தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 25 பங்களாதேஷ் பிரஜைகளுடைய போலிகடவுச் சீட்டுக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அவர்களை தேடும் நடவடிக்கையைமுன்னெடுத்துள்ளதாகவும் பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.