நுவரெலியா வாகன விபத்தில் பெண் பலி; ஒருவர் காயம்!

accident-logoக.கிஷாந்தன்

 

நுவரெலியா பதுளை வீதி, சீதாவனராமய பகுதியில் 13.06.2016 அன்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிவனு வேலுச்சாமி என்ற 62 வயது பெண் உயிரிழந்துள்ளதுடன் 27 வயது இளைஞர், காயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

நுவரெலியாவிலிருந்து லக்கிலேன்டுக்கு பயணித்த இ.போ.ச பஸ்ஸும் பண்டாரவளையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்று கொண்டிருந்த  முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

 

முச்சக்கர வண்டியானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸுடன் மோதியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண்ணே உயிரழந்துள்ளார். முச்சக்கர வண்டியின் சாரதி கடும் காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.