தேசிய அரசாங்கத்தின் பலத்தை எவராலும் இலகுவில் சிதறச் செய்ய முடியாது – ரவி

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார். 

நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போதும் வாக்கெடுப்பின் போதும் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு அமைச்சர் கருணாநாயக்க நன்றி கூறியுள்ளார். 

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்,

ravi karun

 

இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் கையொப்பமிடவில்லை. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையிலான இந்த தேசிய அரசாங்கத்தை இலகுவில் தோற்கடிக்க முடியாது என்பதனை வெளிக்காட்டவே நாம் விரும்பினோம். 

தேசிய அரசாங்கத்தின் பலத்தை எவராலும் இலகுவில் சிதறச் செய்ய முடியாது என்பது இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.