துருக்கி போலீஸ் நிலையம் மீது கார் குண்டு தாக்குதல் !

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் குர்திஷ் இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் மர்டின் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றான மிட்யாட் நகரில் உள்ள போலீஸ் நிலையம் மீது இன்று பிற்பகல் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் வெடி குண்டுகளால் நிரப்பப்பட்ட காரை மோத வைத்தனர். 
201606081545477731_Two-Turkish-police-officers-killed-in-southeast-car-bombing_SECVPF
இந்த தாக்குதலில் போலீஸ் உயரதிகாரிகள் இருவர் உயிரிழந்ததாகவும், இருபதுக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.